உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீர், நிலவள திட்டம்: 5 கண்மாய்கள் தேர்வு

நீர், நிலவள திட்டம்: 5 கண்மாய்கள் தேர்வு

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் நீர், நிலவள திட்டத்தில் 2011-12ம் ஆண்டிற்கான செயல்விளக்க திடல்கள் அமைக்க குறுக்கட்டான்குளம், ஆரியங்குளம், சாமநத்தம், மேலநெடுங்குளம், சோளங்குருணி கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக, திருப்பரங்குன்றம் வேளாண்மை உதவி இயக்குநர் செல்வன் தெரிவித்தார். அவரது அறிக்கை: இக்கண்மாய்களுக்கு உட்பட்ட விவசாய நிலங்களில் திருந்திய நெல் சாகுபடிக்கு, மானியத்தில் உரம், விதைகள், தக்கைப்பூண்டு வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் நிலம் குறித்த விபரங்களை, உதவி அலுவலர்கள் அழகேசன், பாண்டி, ரவிச்சந்திரன், ரமீளா, பேபி ஷாலினியிடம் தெரிவிக்கலாம், என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ