மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
21-Dec-2024
மதுரை : மதுரையில் அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி மஹா பெரியவரின் ஆராதனை விழா இன்று (டிச.25) தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.மதுரை எஸ்.எஸ். காலனி பிராமண கல்யாண மண்டபத்தில் இன்று மாலை 6:00 மணிக்கு மதுரை வைதிக சமாஜம் ஆலோசகர் அருணாசல வாத்தியார், பேச்சாளர் நாகை முகுந்தன், எழுத்தாளர் ப.திருமலை, ஆன்மிக கட்டுரையாளர் பவித்ரா நந்தகுமார், சமூக ஆர்வலர் பாலா ராமச்சந்திரன் ஆகியோருக்கு 'ஸ்ரீ மஹாபெரியவா விருது' வழங்கப்படுகிறது. சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் வழங்குகிறார்.அதைதொடர்ந்து நாகை முகுந்தன் 'கோதையும் கோபாலனும்' என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். நாளை மாலை 6:00 மணிக்கு பேச்சாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் 'குருவே சரணம்' என்ற தலைப்பில் பேசுகிறார். டிச.27 மஹா பெரியவர் ஆராதனை வைபவத்தை முன்னிட்டு, காலை 9:00 மணிக்கு மஹா பெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், மகன்யாஸம், புஷ்பாஞ்சலி, சிறப்பு அர்ச்சனை நடக்கிறது. பிரார்த்தனைகளுக்காக அர்ச்சனையில் பங்குபெற்று பிரசாதம் பெற விரும்பும் பக்தர்கள் ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு, நெல்லை வெங்கடேஸ்வர பாகவதர் குழுவினரின் ஆண்டாள் கல்யாணம், நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாட்டை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார்.
21-Dec-2024