உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கல்லுாரியில் பல்திறன் போட்டிகள்

 கல்லுாரியில் பல்திறன் போட்டிகள்

அவனியாபுரம்: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் ஐன்ஸ்டீன் தின விழாவை முன்னிட்டு இயற்பியல் துறை சார்பில் கல்லுாரிகளுக்கு இடையிலான பல்திறன் போட்டி நடந்தது. முதல்வர் சந்திரன் துவக்கி வைத்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். வினாடிவினா, ஆய்வுக்கட்டுரை வழங்கல், மாதிரி காட்சிப்படுத்தல், போஸ்டர் விளக்கம், புதையல் வேட்டை, ரங்கோலி போட்டிகளில் 7 கல்லுாரிகளைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பாத்திமா கல்லுாரி மாணவியர் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றனர். உதவி பேராசிரியர் முருகலட்சுமி நன்றி கூறினார். பேராசிரியர்கள் சரவணகுமார், சர்வேஸ்வரன், நாராயணமூர்த்தி, செண்பகபாலகிருஷ்ணன், நித்யா ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !