மேலும் செய்திகள்
குன்றத்து சுவாமிகள் மதுரைக்கு புறப்பாடு
25-Aug-2025
கிருஷ்ண மண்டபத்தின் அழகியல்
20-Aug-2025
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி உற்ஸவம் செப். 23 முதல் அக். 2 வரை நடக்கிறது. கோயில் விசாக கொறடு மண்டபத்தில் துர்கை அம்மன் எழுந்தருளி தினம் ஒரு கொலு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். செப். 23ல் ராஜராஜேஸ்வரி, 24ல் நக்கீரருக்கு காட்சி கொடுத்தல், 25ல் ஊஞ்சல், 26ல் பட்டாபிஷேகம், 27ல் திருக்கல்யாணம், 28ல் தபசு காட்சி, 29ல் மகிஷாசுரவர்த்தினி, 30ல் சிவபூஜை, அக்.1ல் சரஸ்வதி பூஜை, 2ல் உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்க குதிரை வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறுகின்றன.
25-Aug-2025
20-Aug-2025