உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேப்பம் பழம் சேகரிப்பில் கிடைக்குது கணிசமான வருமானம்

வேப்பம் பழம் சேகரிப்பில் கிடைக்குது கணிசமான வருமானம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பகுதி கிராமங்களில் வேப்பம் பழங்களை சேகரித்து ஏராளமான மூதாட்டிகள் வருமானம் ஈட்டுகின்றனர். ரோடு ஓரங்கள், பூங்காக்கள், பொது இடங்களில் உள்ள மரங்களில் பழுத்த பழங்கள் தரையில் விழுந்து கேட்பாரற்ற கிடக்கின்றன. அந்தப் பழங்களை பலர் சேகரித்து வெயிலில் காய வைத்து வேப்பங்கொட்டையை தனியே பிரித்தெடுக்கின்றனர். இவற்றை கிலோ ரூ.60 முதல் ரூ. 100 வரையிலும், தோலுடன்கூடிய வேப்பங்கொட்டையை ரூ. 30 முதல் ரூ. 40 வரையிலும் விற்பனை செய்கின்றனர் . இந்த மூன்று மாதங்கள் வேப்பம் பழங்களால் கணிசமான வருவாய் ஈட்டுகின்றனர். கடந்தாண்டு பழங்கள் மிகக் குறைந்த அளவிலேயே கிடைத்தது. இந்தாண்டு அதிகளவில் வேப்பம் பழங்கள் கிடைக்கிறது. வேப்ப எண்ணெய், பிண்ணாக்கு தயாரிக்க வியாபாரிகளும், இயற்கை விவசாயத்திற்காக விவசாயிகளும் வேப்பம் பழங்களை அதிகளவில் வாங்கிச் செல்வதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை