உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளுக்கு கை கொடுக்கும் வேப்பம்பழம்

விவசாயிகளுக்கு கை கொடுக்கும் வேப்பம்பழம்

பேரையூர்: பேரையூர் பகுதிகளில் வேப்பம்பழம் சீசன் துவங்கியதால் விவசாயிகள் பழங்களை சேகரித்து வருகின்றனர். விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேலை இழந்து இருந்தனர். தற்போது வேப்பம்பழம் சீசன் துவங்கி விட்டதால் அப்பழத்தை சேகரித்து விற்று வருகின்றனர். விவசாயிகள் கூறியதாவது: வேப்பங்கொட்டை சேகரிப்பு அன்றாட வருவாய் தரும் தொழிலாக உள்ளது. கமிஷன் கடைகளில் கிலோ ரூ. 65க்கு கொள்முதல் செய்கின்றனர். இரு மாதங்கள் வரை சீசன் இருக்கும். அதன்பின் விவசாய வேலைகளை துவங்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !