நீட் தேர்வு பயிற்சி
மதுரை,: மதுரை மாநகராட்சி சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு 'நீட்' நுழைவுத் தேர்வு பயிற்சி முகாமை மேயர் இந்திராணி, கமிஷனர் சித்ரா துவக்க வைத்தனர்.இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு பயிற்சிக்கான கையேடுகளை வழங்கப்பட்டன. முதற்கட்டமாக 10 பள்ளிகளை சேர்ந்த 30 மாணவிகளுக்கு பாடம்வாரியாக சிறப்பு ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன், கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், ஆசிரியர் சண்முகத்திருக்குமரன், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.