உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தீப்பிடித்த புதிய கார்

தீப்பிடித்த புதிய கார்

மதுரை: மதுரை சூர்யா நகரை சேர்ந்த அர்ஜூனன் 55, திலகர்திடல் பகுதியில் ஆட்டோமொபைல் கடை வைத்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன் கார் வாங்கியுள்ளார். நேற்று மதியம் ஆட்டுமந்தை பகுதியில் இருந்த வாகனப் பார்க்கிங்கில் காரை நிறுத்தியுள்ளார். இரவு 9:00 மணிக்கு வீட்டுக்கு செல்ல காரை ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பிடித்தது. அர்ஜூனன் காரில் இருந்து இறங்கி தப்பினார். பின்னர் தீ அணைக்கப்பட்டது. திலகர்திடல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை