என்.எஸ்.எஸ்., முகாம்
திருமங்கலம் : திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில் பெரிய மறவன் குளத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடங்கப்பட்டது. தலைமையாசிரியர் அருள்ஜோதி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயராம் தலைமை வகித்தார். கவுன்சிலர் ரம்ஜான் பேகம், தி.மு.க., வட்டச் செயலாளர் ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் அன்னபூரணி உட்பட பலர் பங்கேற்றனர்.