ஒரு போன் போதுமே..!
நிரம்பி வழியும் தொட்டிகள்மதுரை கே.கே.நகர் லேக் வியூ ரோட்டில் 3 குப்பைத் தொட்டிகள் உள்ளன. அப்பகுதி உணவகங்களில் சேரும் கழிவுகளை பிளாஸ்டிக் கவர்களில் கட்டி இரவு நேரங்களில் வீசுகின்றனர். சுகாதார ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிவஞானம், கே.கே.நகர்.குப்பையை எரிப்பதாமதுரை பாத்திமா கல்லுாரி அருகே உள்ள பாலத்தின் கீழ் குப்பையை எரிப்பதால் புகை கிளம்புகிறது. அதனை சுவாசிக்கும் மக்களின் உடல்நலன் கேள்விக்குறியதாகிறது. இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜேஷ்கண்ணன், செல்லுார்.பல்லாங்குழி ரோடுகள்மதுரை அனுப்பானடியில், கீழ அனுப்பானடி பஸ் ஸ்டாண்டில் இருந்து வ.உ.சி., மன்றம் வரை உள்ள ரோடுகள் பல்லாங்குழி போல் மேடு பள்ளமாக காட்சியளிக்கின்றன. மழைக்காலம் வரும்முன் பேவர்பிளாக் கற்கள் பதிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கந்ந வடிவேல், அனுப்பானடி.குடிநீருக்காக அலைச்சல்கீழ் மதுரை, சின்னக்கண்மாய் பகுதியில் ஜி.எம்.கிருஷ்ணன் சந்தில் புதிய குடிநீர் குழாய்களை பதித்தும் இன்னும் குடிநீர் சப்ளை செய்யவில்லை. இதனால் பிற பகுதிகளுக்கு தேடி அலைய வேண்டியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சரவணன், கீழ்மதுரை.மருத்துவக் கழிவை கொட்டுவதாமதுரை எல்லீஸ் நகர் குடியிருப்பு பகுதியின் பின்புறம் மருத்துவக் கழிவுகளை கொட்டுகின்றனர். குடியிருப்புப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை அகற்ற நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரவிச்சந்திரன், எல்லீஸ் நகர்.சுற்றுச்சூழல் சீர்கேடுதிருமங்கலத்தில் செயல்படும் தனியார் மெட்டல் கம்பெனியால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மிகவும் சீர்கேடு அடைந்து விட்டது. விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-காதர்பாட்ஷா, கூத்தியார்குண்டு.