சுற்றுச்சுவரில்லாத கால்நடை மருத்துவமனை
பேரையூர்: பேரையூர் தாலுகா அலுவலகம் அருகே கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்காததால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. புதர் மண்டிக் கிடப்பதால் இரவு நேரத்தில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் மிகுந்த பகுதியாக மாறி வருகிறது. எனவே மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.