உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு பொதுமக்கள் அச்சம்

ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு பொதுமக்கள் அச்சம்

மதுரை: மதுரை தெப்பக்குளம் புது ராமநாதபுரம் ரோடு பகுதியில் சாயப்பட்டறையின் ரசாயன கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.அவர்கள் கூறியதாவது: பல ஆண்டுகளாக இப்பகுதியில் சாயப்பட்டறை செயல்படுகிறது. இங்கு வெளியேறும் ரசாயன கழிவுகளை அந்த வளாகத்துக்குள்ளேயே தினமும் விடுகின்றனர். சுத்திகரிப்பு செய்யப்படாததால் நிலத்தடி நீர் மாசடைந்து விட்டது. தற்போது வீடுகளின் ஆழ்குழாய் நீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தினால் தோல், அலர்ஜி பிரச்னை ஏற்படுகிறது. நீர் மாதிரிகளை பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும். மாநகராட்சி ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.சாயப்பட்டறை தரப்பில் கேட்டபோது, ''உரிமம் பெற்று நடத்தி வருகிறோம். கழிவுநீரை சுத்திகரித்து மறு உபயோகத்துக்கு பயன்படுத்துகிறோம். கழிவென வெளியேறும் குறைந்த அளவு நீரையும் தோட்டத்துக்கு பயன்படுத்துகிறோம். எந்த விதிமீறலும் இல்லை'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
மே 30, 2025 06:21

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியின் கர்பகனா பகுதியிலிருந்து ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் பொதுநல குறையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இணைதெரியதொரு நடவடிக்கையாக, நகராட்சி அதிகாரிகள் அல்லது அவர்கள் ஒப்பந்ததாரர்கள், ராயலசீமா பட்டியில் உள்ள ரயில்வே ப்ளாக் உற்பத்தி ஆலைக்குச் சொந்தமான கட்டுமான கழிவுகளை நகரின் முக்கிய சாலைகளில் பரப்பி வருகின்றனர். இந்த கழிவுகள் முறையாக சீரமைக்கப்படாமல் அல்லது சாலைக்கான தரநிலைகளுக்கு ஏற்ப தயார் செய்யப்படாமல் இருப்பதால், வாகனங்கள் செல்வதன் மூலம் மிகவும் அதிக அளவில் தூசி மாசு ஏற்படுகிறது. முக்கிய கவலைகள்: • உடல்நல பாதிப்பு: தூசியின் காரணமாக மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுகாதார சிக்கல்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோருக்கு ஏற்படுகின்றன. • வியாபார மீதான தாக்கம்: சாலையோர வியாபாரிகள் மற்றும் கடைகளில் வாடிக்கையாளர்கள் குறைந்து வருகிறார்கள், பொருட்களில் தூசி அடித்துவிடுகிறது. • சுற்றுச்சூழல் பாதிப்பு: நீண்ட காலமாக தூசி மாசு நிலவுவதால் மண் மற்றும் காற்று தரம் பாதிக்கப்படும். • பொது அறிவிப்பின்றி நடவடிக்கை: இப்பகுதியில் மக்கள் அறிவிப்பு இன்றி மற்றும் எந்தவொரு ஆலோசனையும் இல்லாமல் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடைமுறை, நகராட்சி மேலாண்மையில் தவறான முன்மாதிரி anti-pattern ஆகும். இது பாதுகாப்பான, சுறுசுறுப்பான மற்றும் பொதுமக்கள் நலனுக்கு அமைவான திட்டமிடல் நடைமுறைக்கு எதிரானது. எங்களது கோரிக்கைகள்: 1. சாலைகளில் கையாளப்படுகிற கட்டுமான கழிவுகளின் உரிய பரிசோதனை மற்றும் உடனடி நிறுத்தம். 2. தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், போதிய நீர் தெளிப்பு அல்லது மற்ற முறைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 3. பயன்படுத்தப்படும் பொருட்களின் மூலம் மற்றும் தகுதியை உறுதி செய்யும் சோதனை. 4. சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார கண்காணிப்பு முறைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 5. மேற்கொள்ளப்பட உள்ள திருத்த நடவடிக்கைகள் மற்றும் காலக்கெடு தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை உங்கள் அலுவலகம் உரிய முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொண்டு, பொது நலனுக்காக விரைந்து நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை