உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தி பட்டமரம் அகற்றம்

தினமலர் செய்தி பட்டமரம் அகற்றம்

சோழவந்தான்: பாலகிருஷ்ணாபுரம் பிரிவில் கணேசபுரம் செல்லும் வழியில் வடகரை கால்வாய்கரையில் பல மாதங்களாக காய்ந்த தென்னை மரம் ஆபத்தான வகையில் நின்றிருந்தது. இவ்வழியே தினமும் ஏராளமானோர் நடந்தும், டூவீலரிலும் செல்வர். இதன் அருகே உயர் மின்னழுத்த மின் கம்பிகள் செல்கின்றன. மரம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபரீதம் விளைய வாய்ப்பிருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து மரத்தை அகற்றினர். பொதுமக்கள் அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !