உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி நிதி பொருளாதார எழுத்தறிவு மன்றம் சார்பில் மாணவர்களின் நிதி பொருளாதார அறிவை மேம்படுத்தும் வகையில் ‘பணத்தின் பயணம். உங்கள் நிதி எதிர்காலத்தைத் திறம்பட கையாளுங்கள்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். உதவிப் பேராசிரியர் சுகன்யா வரவேற்றார். பேராசிரியர் மோகனா சுந்தரி அறிமுக உரையாற்றினார். ஜியோஜித் முதலீட்டு சேவைகள், ஜெரால்ட் முதலீட்டு சேவைகள் மற்றும் பந்தன் மியூச்சுவல் பண்ட் சார்பில் ஜெரால்ட்ராஜ், கோகுல் பேசினர். மாணவி ஹரிணி தொகுத்து வழங்கினார். உதவிப் பேராசிரியர் கார்த்திக் செல்வம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை