ராணுவ வீரர் உடல் அடக்கம்
பேரையூர்: பேரை யூர் தாலுகா பெரியபூலாம்பட்டி மாயாண்டி மகன் மாரிமுத்து 33. ராணுவ வீரராக காஷ்மீரில் பணிபுரிந்தார். மஞ்சள் காமாலை நோயால் பாதித்து அங்கு சிகிச்சையில் இருந்தவர் டிச. 28ல் இறந்தார். இவரது உடல் நேற்று பெரியபூலாம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இவரது உடலுக்கு ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், தாசில்தார் செல்லப்பாண்டி அஞ்சலி செலுத்தினர்.