சிருங்கேரி சுவாமிகள் ஆராதனை விழா
மதுரை: மதுரை அம்மன் சன்னதி சிருங்கேரி சங்கர மடத்தில், ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை விழா இன்று நடக்கிறது. காலை 8:00 மணிக்கு பாதுகை பூஜை, தீபா ராதனையுடன் விழா துவங்குகிறது. 10:30க்கு ஆராதனையும், மதியம் 12:30 மணிக்கு தீர்த்த நாராயண பூஜையும் நடக்கின்றன. பைபாஸ் ரோட்டில் உள்ள சிருங்கேரி மடத்தில் மாலை 6:00 மணிக்கு ஆராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாகிகள் செய்துள்ளனர்.