பேச்சுப்போட்டி
மேலுார்: மேலுாரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரதிதாசன் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றிப் பயணம் சார்பில் பேச்சு போட்டி நடந்தது. அமைப்பின் நிறுவனர் சூர்யா வரவேற்றார். மாணவர்கள் துர்கா, பெரிய சவுளி, பூர்விகா, தேஜஸ்ரீ வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அமைப்பின் நிர்வாகி மணி குமார் உட்பட பலர் பங்கேற்றனர். அகாடமி தாளாளர் ஜீவா நன்றி கூறினார்.