சிந்தனைக் கவியரங்கம்
மதுரை : மதுரை மணியம்மை மழலையர் பள்ளியில் மாமதுரை கவிஞர் பேரவை சார்பில் தலைவர் சக்திவேல் தலைமையில் சிந்தனைக் கவியரங்கம் நடந்தது. செயலாளர் இரா. ரவி வரவேற்றார். கவிஞர்கள் இரா. கல்யாணசுந்தரம், கங்காதரன், குருசாமி, பால் பேரின்பநாதன், அழகையா, லிங்கம்மாள், சிவசத்யா, முனியாண்டி, ஆறுமுகம், இதயத்துல்லா, சுந்தரம் பாண்டி, பழனி, பொன் பாண்டி, பால கிருஷ்ணன், இசக்கி தேவி ஆகியோர் கவிதை பாடினர்.கவிஞர் ராமபாண்டியன் எழுதிய 'கம்பன் காட்டும் உவமைகள்' நுால் வெளியிடப்பட்டது. சிறப்பாக கவிதை பாடியவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. துணைத் தலைவர் வரதராஜன் நன்றி கூறினார்.