உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை: சமுதாய சேவையில் ஈடுபடும் இளையோரின் சேவையை அங்கீகரிக்க 'முதல்வர் மாநில இளைஞர்' விருது வழங்கப்படுகிறது. விருதுக்கு 15 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண்விண்ணப்பிக்கலாம்.2024 ஏப். 1 - 2025 மார்ச் 31 வரையான சேவைகள் கணக்கிடப்படும். தமிழகத்தில் 5 ஆண்டுகள் குடியிருந்த சான்றிதழ் இணைக்க வேண்டும். மத்திய, மாநில அரசு, பொதுத்துறை, பல்கலை, பள்ளி, கல்லுாரிகளில் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது. விண்ணப்பத்தை www.sdat.tn.gov.inஇணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மே 3க்குள் பூர்த்தி செய்ய வேண்டும். 2025க்கான விருது ஆக. 15 சுதந்திர தினவிழாவில் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை