உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / கல்வி உரிமை தொகையை விடுவிக்க தனியார் பள்ளிகள் வலியுறுத்தல்

கல்வி உரிமை தொகையை விடுவிக்க தனியார் பள்ளிகள் வலியுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கை மாநாடு நடந்தது. மாநில தலைவர் ஆனந்தகு மார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், இரண்டு ஆண்டுகளாக விடுவிக்கப்படாத ஆர்.டி.இ., எனப்படும், கட்டாய கல்வி உரிமை திட்டத்தின் கீழான தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்கள் நல வாரியம் ஏற்படுத்த வேண்டும். 10 ஆண்டுகள் செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். தனியார் பள்ளி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை