உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்; தேடும் பணி தீவிரம்

கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்; தேடும் பணி தீவிரம்

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி தண்ணீரில் விழுந்து மாயமான குட்டியாண்டியூர் மீனவரை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன்.46. என்பவருக்கு சொந்தமான ஐஎன்டி- டிஎன் 16 எம்எம் 1793 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர் கிராமங்களைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடித்துச் சென்றனர். இரவு 11:30 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரைக்கு கிழக்கே 11 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது குட்டியாண்டியூரை சேர்ந்த மீனவர் வேலு என்கிற பழனிவேல்.45. என்பவர் விசைப்படகில் இருந்து தவறி கடலில் விழுந்துள்ளார். பின்னர் அவரை காணவில்லை. மாயமான மீனவர் பழனி வேலை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தரங்கம்பாடி மீனவர்கள் தங்களது படகுகளில் சென்று தேடினர். இரவு நேரத்தில் தேடுதல் பணியை தொடர முடியாத நிலையில் அதிகாலை முதல் கடலோர காவல் படை மற்றும் கடலோர காவல் நிலைய போலீசார் பழனிவேலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ