உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / நாகை மீனவர்கள் 31 பேர் சிறைபிடிப்பு

நாகை மீனவர்கள் 31 பேர் சிறைபிடிப்பு

கோடியக்கரை: கோடியக்கரை அருகே கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, நாகையை சேர்ந்த 31 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அக்., 30ம் தேதி இரவு, நம்பியார் நகரை சேர்ந்த பாரி என்பவரது விசைப்படகில், 10 பேர், அக்கரைப்பேட்டை ஆனந்தகுமார், 42, என்பவரது விசைப்படகில், 11 பேர் மற்றும் நவ., 1ம் தேதி, அக்கரைப்பேட்டை ராஜா, 54, என்பவரது விசைப்படகில் 10 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள், நேற்று அதிகாலை கோடியக்கரை தென் கிழக்கில் 45 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மூன்று விசைப்படகுகளையும் சிறைபிடித்து, படகுகளில் இருந்த 31 மீனவர்களையும் கைது செய்து, இலங்கை, காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, ஊர்க்காவல் போலீசார் விசாரணைக்கு பின், யாழ்ப்பாணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ