உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தரக்குறைவான ரூ.1.30 கோடி மதிப்புள்ள விதைகள் விற்க தடை

தரக்குறைவான ரூ.1.30 கோடி மதிப்புள்ள விதைகள் விற்க தடை

நாமக்கல்: சேலம், நாமக்கல் மாவட்டங்களில் செயல்படும், விதை விற்-பனை நிலையங்களில் தரக்குறைவான நிலையில் இருந்த, ரூ.1.30 கோடி மதிப்புள்ள விதைகள் விற்க, விதை ஆய்வு துணை இயக்-குனரால் தடை விதிக்கப்பட்டது.சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில், விற்பனை செய்யப்படும் விதைகளின் முளைப்புத்திறன், இனத்துாய்மை மற்றும் பிடி நஞ்சு போன்றவற்றை உறுதி செய்யும் வகையில், விதை ஆய்வாளர்-களால், 2,946 விதை மாதிரிகள் எடுத்து பகுப்பாய்விற்காக சேலம், கோவை அரசு விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், 43 விதை மாதிரிகள் தரக்குறைவானது என கண்டறியப்பட்டதை தொடர்ந்து, 74 லட்சம் ரூபாய் மதிப்-புள்ள, 14 மெட்ரிக் டன் விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்-பட்டது.இதர விதிமீறல்கள் கண்டறியப்பட்ட விதை விற்பனை நிலையங்-களில், 56 லட்சம் மதிப்புள்ள, 12 மெட்ரிக் டன் விதைகளுக்கு, சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் (பொ) சுமதி விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ