உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இளம் தொழில் முனைவோருக்கு முழு ஒத்துழைப்பு: வணிகர் சங்கம்

இளம் தொழில் முனைவோருக்கு முழு ஒத்துழைப்பு: வணிகர் சங்கம்

நாமக்கல்: மோகனுாரில் உள்ள தனியார் நிறுவனம், வாழை நாரிலிருந்து தர-மான பல்வேறு கைவினை பொருட்களை தயாரித்து சந்தைப்ப-டுத்தி வருகிறது. இந்த நிறுவனம் இதுவரை, 100க்கும் அதிகமான பெண்களுக்கு நேரடி பயிற்சி அளித்தும், 25 பெண்களுக்கு இதே நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் கூறியதாவது: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஒரு அங்கமான இளம் தொழில் முனைவோர் அமைப்பு இம்மாதிரியான தொழில் முனைவோருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. தரமான தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், உள்-நாட்டில் சந்தைப்படுத்தவும் அனைத்து முயற்சிகளையும் மேற்-கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர-மைப்பின் நாமக்கல் மாவட்ட பொருளாளர் சீனிவாசன், இணை செயலாளர் தேவி உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிககள் உடனிருந்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி