உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் புதிய பாடப்பிரிவு உருவாக்க மனு

அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் புதிய பாடப்பிரிவு உருவாக்க மனு

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமாவிடம், இந்திய மாணவர் சங்கத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மோகனுார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் திருச்சி, கரூர், சேலம் உள்-ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றோம். இங்கு, 4 பாடப்பிரிவுகள் மட்டுமே உள்ளன. இந்த நான்கு பாடப்பிரிவுகளை தவிர்த்து, மற்ற பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவ, மாணவியர், தனியார் கல்லுா-ரியில் சேர்ந்து படிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.மேலும், இக்கல்லுாரியில் புதிய ஆய்வக கட்டடம் அமைத்து தர-வேண்டும். இங்கு படிக்க வரும் மாணவ, மாணவியருக்கு பஸ் வசதி இல்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு வரும் பஸ்களில், படி-களில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. எனவே, பஸ் வசதியும் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை