உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.40 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

ரூ.40 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, பவித்திரத்தில் திங்கள் தோறும் ஆட்டுச்-சந்தை நடக்கிறது. இங்கு, எருமப்பட்டி, செல்லிபாளையம், கஸ்-துாரிப்பட்டி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வரு-கின்றனர்.இதேபோல், நேற்று நடந்த ஆட்டுச்சந்தைக்கு, கிராமங்களில் இருந்து வரும் ஆடுகள் வரத்து குறைந்ததால், வெளியூரில் இருந்து வந்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். இதனால், கடந்த வாரம், 47 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமான நிலையில், இந்த வாரம், 40 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகமானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை