உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

எருமப்பட்டி:எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் தெருநாய்களை பிடித்து, குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் டவுன் பஞ்., அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சிவச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் பெருமாள், 'தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார். 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை