உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் உழவர் சந்தையில் 26 டன் காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 26 டன் காய்கறி விற்பனை

நாமக்கல்: நாமக்கல் கோட்டை மெயின் சாலையில், உழவர் சந்தை செயல்-பட்டு வருகிறது. தினமும், காலை, 5:00 முதல், 10:00 மணி வரை செயல்படும் இங்கு, நாமக்கல் பகுதியில் உள்ள விவசா-யிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.அதன்படி, ஞாயிற்றுக்கிழமையான நேற்று, 168 விவசாயிகள், 21,335 கிலோ காய்கறிகள், 4,930 கிலோ பழங்கள், 15 கிலோ பூக்கள், இதர காய்கறிகள், 450 கிலோ என, மொத்தம், 26,730 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்-டுவந்து விற்பனை செய்தனர்.அவற்றை, 5,346 நுகர்வோர் வங்கி சென்றனர். அதன் மூலம் மொத்தம், 9 லட்சத்து, 28,010 ரூபாய்க்கு விற்பனையானது. தக்-காளி ஒரு கிலோ, 24, கத்தரி, 36, வெண்டை, 20, சின்ன வெங்-காயம், 44, பெரிய வெங்காயம், 55, இஞ்சி, 150 ரூபாய்க்கு விற்-பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ