மேலும் செய்திகள்
ஜெ., பிறந்தநாள் விழா; கட்சியினர் கொண்டாட்டம்
25-Feb-2025
பள்ளிப்பாளையம்: -பள்ளிப்பாளையம் அடுத்த ஆவாரங்காடு பகுதியில், பள்ளிப்பா-ளையம் நகரம், ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.நகர செயலாளர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி, ஜெயலலிதா படத்-திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கட்சிக்-கொடி ஏற்றி வைத்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், நகர அம்மா பேரவை செயலாளர் சுப்பிரமணி, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., செயலாளர் செல்ல-துரை, படவீடு டவுன் பஞ்., செயலாளர் ஜெகநாதன், பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், ஆனங்கூர் பஞ்., முன்னாள் தலைவர் சிங்காரவேலு, நகர துணை செயலாளர் ஜெய்கணேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
25-Feb-2025