மேலும் செய்திகள்
ஆஞ்சநேயருக்கு காய்கறி அலங்காரம்
17-Feb-2025
மெட்டாலா ஆஞ்சநேயர்கோவிலில் 6ல் தீ மிதி விழாநாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அடுத்து மெட்டாலா கணவாயில், வரலாற்று சிறப்பு மிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பங்குனி மாதம் கடைசி வாரம் தீ மிதி விழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விழா வரும், 5ல் பந்தல் சேர்வையுடன் தொடங்குகிறது.நாமகிரிப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்படும் பந்தலில், அன்றிரவு ஆஞ்சநேயர் உற்சவர் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 6 காலை, கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆஞ்சநேயர் நாமகிரிப்பேட்டையில் இருந்து ஊர்வலமாக மெட்டாலா கொண்டு செல்லப்படுகிறார். ஆத்துார் பிரதான சாலை வழியாக இந்த ஊர்வலம் நடக்கவுள்ளது. மதியம், சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலை பக்தர்கள் தீ மிதி விழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை, ஹிந்து அறநிலையத்துறையுடன் இணைந்து விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
17-Feb-2025