ஓட்டுச்சாவடி பட்டியல் முன்மொழிவு குறித்து ஆலோசனை கூட்டம்
ஓட்டுச்சாவடி பட்டியல் முன்மொழிவுகுறித்து ஆலோசனை கூட்டம்நாமக்கல், ஆக. 30-நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா தலைமையில், ஓட்டுச்சாவடி பட்டியல் முன்மொழிவு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.இந்திய தேர்தல் ஆணையத்தால், 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச் சாவடிகளை பிரித்து, புதிய ஓட்டுச் சாவடிகள் அமைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் ஆறு சட்டசபை தொகுதிகளிலுள்ள, 1,628 பாகங்களில் எந்தவொரு ஓட்டுச்சாவடியிலும், 1,500 வாக்காளர்களுக்கு மேல் இல்லை. 1,628 ஓட்டுச் சாவடிகளில் அமைந்துள்ள கட்டடங்கள் பழுதடைந்ததன் காரணமாகவும், வேறு பயன்பாட்டிற்கு பள்ளிகளால் பயன்படுத்தபடுவதாலும், ஆறு சட்டசபை தொகுதிகளிலும் கட்டடம் மாற்றம், அமைவிடம் மாற்றம், பெயர் மாற்றம் மேற்கொள்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் பார்த்தீபன், சுகந்தி, தாசில்தார்கள், மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.