மேலும் செய்திகள்
ரேஷன்கடை புகார்களை கூற 25ல் குறைதீர் கூட்டம்
23-Jan-2025
8 தாலுகா அலுவலகங்களில்25ல் நுகர்வோர் குறைதீர் முகாம்நாமக்கல்,: 'மாவட்டத்தில் உள்ள, 8 தாலுகா அலுவலகத்தில், வரும், 25ல் பொது வினியோகத்திட்ட குறைதீர் சிறப்பு முகாம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை, நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி மேற்கொள்ளவும், பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், வரும், 25 காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.அதன்படி, நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார் மற்றும் குமாரபாளையம் தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடக்கிறது. பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, பொது வினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
23-Jan-2025