நெஞ்சு வலியால் தொழிலாளி பலி
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 52; தனியார் நுாற்பாலையில் சமையல் தொழிலாளி. இவருக்கு, நேற்று முன்தினம் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் துடித்த இவரை மீட்டு, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செயத டாக்டர்கள், வரும் வழிலேயே கண்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.