மேலும் செய்திகள்
வாரியங்களுக்கு அதிகாரம் கேட்டு ஆர்ப்பாட்டம்
28-Aug-2024
நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். அதில், வாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சட்டத்தில் உள்ளபடி, இ.எஸ்.ஐ., மருத்துவ வசதி வழங்க வேண்டும். வாரிய முடிவுப்படி ஓய்வூதியம் மாதம், 2,000 ரூபாய் வழங்க வேண்டும்.மனு செய்த அனைவருக்கும் வீடு வழங்கி, வீடு மானியம், 4 லட்சம் ரூபாய் என்பதை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். வீட்டு வசதி திட்டத்தை துவங்கி, 3 ஆண்டுகள் கடந்தும் திட்டத்தை நிறைவேற்றாத அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை இடத்தில் விபத்தில் மரணமடையும், ஊனமடையும் தொழிலாளிக்கு, இழப்பீடு சட்டப்படி முழு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
28-Aug-2024