உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு 15 கிலோ செந்துார அலங்காரம்

ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு 15 கிலோ செந்துார அலங்காரம்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, பெரியமலை ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு 15 கிலோ செந்துாரத்தால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரா-தனை நடந்தது.சேந்தமங்கலம் அருகே, மரூர்ப்பட்டி பெரியமலை அடிவா-ரத்தில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று மார்கழி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, 9 அடி ஸ்ரீபக்த ஆஞ்சநே-யருக்கு, பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 12 வகை-யான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்-டது.பின், ஆஞ்சநேயருக்கு 1 5கிலோ செந்துாரத்தால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, மலையில் ‍உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்-யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ