மேலும் செய்திகள்
திருவள்ளுவர் தின விழா..
17-Jan-2025
நாமக்கல்: நாமக்கல், ராசிபுரம் மற்றும் பனமரத்துப்பட்டியில், 24 மனை தெலுங்கு செட்டியார் ஏழூரு பூர்வீக அறக்கட்டளை சார்பில், முப்பெரும் விழா அறக்கட்டளை நிர்வாக தலைவர் செல்வகுமார் தலைமையில் நடந்தது.விழாவில், பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்கப்பட்டது. தொடர்ந்து பெண்களுக்கான கோலப்போட்டி, இளைஞர்கள், இளம் பெண்களுக்கான தனித்திறன் போட்டி ஆகியன நடைபெற்றது. நாமக்கல், ராசிபுரம், பனமரத்துபட்டி, புதுச்சத்தரம், திருச்சி, வெள்ளகோவில் உள்ளிட்ட 27 ஊர்களை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் அறக்கட்டளை சார்பில் வெள்ளி காசு, பொங்கல் சீர், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.திறன் மேன்பாடு மற்றும் தனித்திறமை சாதனையாளர்களுக்கு கம்ப்யூட்டர்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
17-Jan-2025