ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை
ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனைபுதுச்சத்திரம்:புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. அதிகாலை, 3:00 மணிக்கு துவங்கும் இந்த சந்தைக்கு, நாமக்கல், சேந்தமங்கலம், புதுச்சத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு, ரம்ஜான் பண்டிகையையொட்டி, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து மாடுகள் வாங்கி செல்ல அதிகளவில் வியாபாரிகள் புதன்சந்தைக்கு வந்தனர். இதனால், மாட்டுச்சந்தையில் ரம்ஜான் பண்டிகை விற்பனை சூடுபிடித்து, 2.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.