உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தெலுங்கானாவில் இருந்து வந்த 2,600 டன் ரேஷன் அரிசி

தெலுங்கானாவில் இருந்து வந்த 2,600 டன் ரேஷன் அரிசி

நாமக்கல்: நாமக்கல் பகுதியில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களும், கோழித்தீவனத்திற்கு தேவையான மக்காச்சோளம், தவுடு, கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும் பெரும்பாலும் வடமாநிலத்தில் இருந்து வாங்கி வரப்படும்.அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான, 2,600 டன் புழுங்கல் அரிசி, தெலுங்கானா மாநிலம், கரிம் நகரில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டது. பின், 120 லாரிகளில் ஏற்றி, நல்லிபாளையத்தில் உள்ள உணவு பாதுகாப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி