உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தெலுங்கானாவில் இருந்து ரயிலில் வந்த 2,700 டன் அரிசி

தெலுங்கானாவில் இருந்து ரயிலில் வந்த 2,700 டன் அரிசி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான, ரேஷன் அரிசி, தெலுங்கானாவில் இருந்து சரக்கு ரயில் மூலம், நாமக்கல்லுக்கு வந்திறங்கியது.நாமக்கல் பகுதியில் செயல்படும் கோழித்தீவனத்திற்கு தேவையான மக்காச்சோளம், கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும், ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, அரிசி, சக்கரை உள்ளிட்ட உணவு பொருட்களும், பெரும்பாலும் வடமாநிலத்தில் இருந்து வாங்கி வரப்படும். அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளின் தேவைக்காக, 2,700 டன் அரிசியை தெலுங்கானா மாநிலம், செல்லாபள்ளியில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து, 110 லாரிகளில் ஏற்றி, உணவுப்பொருள் பாதுகாப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை