உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 358 கிலோ பட்டுக்கூடு ஏலம்

358 கிலோ பட்டுக்கூடு ஏலம்

ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர்.நேற்று, 358 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதி-கபட்சம் கிலோ, 515 ரூபாய், குறைந்தபட்சம், 320 ரூபாய், சரா-சரி, 415 ரூபாய் என, 358 கிலோ பட்டு கூடு, 1.48 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ