உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

ராசிபுரம், ராசிபுரத்தில், அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. பொன்வரதராஜ பெருமாள் கோவிலின் உப கோவிலான இங்கு, சீரமைக்கும் பணி நடந்து வந்த நிலையில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. யாகசாலைக்கு, கடந்த, 8ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. 27ல் சுதர்சன ஹோமம் நடந்தது. பின், புண்ணிய நதி தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. நேற்று காலை, இரண்டாம் கால வேள்வி நடந்தது. மதியம் மூலவர், நவமாருதி சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மூலவர் விமானம் சால கோபுர கலச ஸ்தாபனம் நடந்தது.நேற்று காலை, 6:00 மணிக்கு மூலவர் ஸ்தாபன திருமஞ்சனம், அலங்காரம் ஆகியவை நடந்தன. காலை, 9:45 மணிக்கு மூலவர் விமான கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. புனித நீரை பக்தர்களுக்கு தெளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி