உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

குமாரபாளையம், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை குறித்து, கல்லுாரி முதல்வர்(பொ) சரவணாதேவி வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2025-26ம் கல்வியாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் சேர, www.tngasa.inஎன்ற இணையதள முகவரியில், கடந்த, 7 முதல் மே, 27 வரை விண்ணப்பிக்கலாம் என, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், பி.காம்.,-பி.பி.ஏ.,-பி.எஸ்சி., கணினி அறிவியல், பி.எஸ்சி., இயற்பியல், பி.எஸ்சி., வேதியியல், பி.எஸ்சி., கணிதம் ஆகிய பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர், கல்லுாரி குறியீட்டு எண்: 1031013ஐ பயன்படுத்தி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆலோசனைகளை கல்லுாரியின் மாணவர் சேர்க்கை உதவி மையத்தில் பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான விபரங்களை www.tngasa.inமற்றும் www.gasckpm.org என்ற இணையதளத்தில் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை