மேலும் செய்திகள்
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா
11-Sep-2024
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்-லுாரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கல்லுாரி தலைவர் பாரத்குமார் தலைமையில், மகாத்மா காந்தி கலைய-ரங்கில் நடந்தது. விழாவில் முன்னாள் மாணவர்கள் கலந்து-கொண்டு, தங்களின் அனுபவங்களையும், கல்லுாரி நினைவுக-ளையும் பகிர்ந்து கொண்டனர். மேலும், முன்னாள் மாணவர் அமைப்பானது, தற்போது பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, தொழிற்சார் திறன்களை மேம்படுத்த உதவி செய்வது, அவ்வப்போது அவர்க-ளுடன் கலந்துரையாடுவது மற்றும் உயர்தொழிற் நிறுவனங்களில் அவர்களை பணியமர்த்த தேவையான முன்னேற்பாடுகளை செய்-வது என, முடிவு செய்யப்பட்டது. அனைவரும் ஒருங்கிணைந்து சமூக மறுமலர்ச்சி ஏற்படுத்த, இது போன்ற நிகழ்ச்சி உதவிபு-ரியும் என, பேசினர்.பின், இசை நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி செயல் இயக்குனர் சாம்சன் ரவீந்திரன், முதல்வர்கள் மஹேந்ரகவுடா, இளங்கோ, செந்தில்குமார், புலமுதல்வர்கள் சண்முகம், நிர்மலா, ராஜவேல், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவ, மாண-வியர் கலந்து கொண்டனர்.
11-Sep-2024