ஆனங்கூர் ரயில்வே கேட் இன்று 4 மணி நேரம் மூடல்
ஆனங்கூர் ரயில்வே கேட்இன்று 4 மணி நேரம் மூடல்பள்ளிப்பாளையம், நவ. 5-'பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை - -திருச்செங்கோடு வழித்தடத்தில் உள்ள ஆனங்கூர் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, இன்று, 4 மணி நேரம் மூடப்படுகிறது' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வெளியிட்ட அறிக்கையில், 'ஆனங்கூர் ரயில்வே கேட் அவசர பராமரிப்பு பணிகளுக்கு இன்று மதியம், 12:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை மூடப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் மாற்றுப்பாதையில் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.