உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாசி முதல் ஞாயிறையொட்டி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

மாசி முதல் ஞாயிறையொட்டி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

நாமக்கல்: நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமி, நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்பு, தமிழ் மாத முதல் ஞாயிறு உள்ளிட்ட முக்கிய தினங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கும்.அதன்படி, மாசி முதல் ஞாயிற்றுக்கிழமையன நேற்று, சுவாமிக்கு காலை 10:00 மணிக்கு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதையடுத்து இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்த சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ