உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்: பயன்பெற அழைப்பு

தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்: பயன்பெற அழைப்பு

நாமக்கல்: 'தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம், நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நாளை நடக்கிறது. அதில் பயிற்சியாளர்கள் பங்கேற்று பயன்பெறலாம்' என, கலெக்டர் உமா தெரிவித்தார் இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தேசிய தொழிற்பழகுனர் ஊக்குவிப்பு திட்டம் மூலம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், நாமக்கல் மாவட்ட அளவில், பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுனர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம், நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை காலை, 10:00 முதல், மாலை, 4:00 மணி வரை நடக்கிறது.அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், ஐ.டி.ஐ., பயின்று வெற்றிக்கரமாக பயிற்சியை நிறைவு செய்து, இதுநாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சி மேற்கொள்ளாத பயிற்சியாளர்கள், தங்களது கல்வி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, தேசிய, மாநில தொழிற் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன், தொழிற்பழகுனர் சேர்க்கை முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.விபரங்களுக்கு, 'உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மூன்றாம் தளம், அறை எண், 304-306, நாமக்கல் கலெக்டர் பெருந்திட்ட வளாகம், நாமக்கல்--637003' என்ற முகவரியில் நேரிலும், 04286--290297, 9487745094, 7904111101 என்ற தொலைபேசி மற்றும் மொபைல் போனிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி