மேலும் செய்திகள்
வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டி
20-Aug-2025
ராசிபுரம் ;ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வி துறை சார்பில், மாவட்ட அளவிலான, குடியரசு தின மற்றும் பாரதியார் தின தடகள விளையாட்டு போட்டி நேற்று நடந்தது.கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஒலிம்பிக் ஜோதி ஏற்றி, துவக்கி வைத்தார்.நாமக்கல் வருவாய் மாவட்ட அளவில் நடந்த போட்டியில், 6 முதல், பிளஸ் 2 வரை உள்ள அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை பள்ளிகள், தனியார், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவியர், 477 பேர் பங்கேற்றனர்.மேலும், வரும், 25ல் நடக்கும் விளையாட்டு வீரர்களுக்கான போட்டியில், 501 மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். தடகள போட்டிகளில், 14 வயதிற்குட்பட்டோர், 100, 200, 400, 600 மீ., ஓட்டம், 80 மீ., தடையோட்டம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டி, 17 வயதிற்குட்பட்டோர், 100, 200, 400, 800, 1,500, 3,000 மீ., ஓட்டம், 100 மீ., தடைதாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், 19 வயதிற்குட்பட்டோர், 100, 200, 400, 800, 1,500, 3,000 மீ., ஓட்டம், 100 மீ, 400 மீ தடைதாண்டி ஓட்டம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டனர்.'நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் தமிழக அரசின் மூலம் நடத்தப்படும் இதுபோன்ற விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு, உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் என, அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பி.டி.ஏ., தலைவர் சங்கர், அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
20-Aug-2025