உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல்லில் நடந்த ரெய்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது

நாமக்கல்லில் நடந்த ரெய்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாமக்கல்: நாமக்கல்லில், நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கி உள்ளது. அவற்றை எண்ணும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். ரூ. 4 கோடி பணம் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி பணப் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுசெல்லப்படும் பணம், பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9ftxulhj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையில் சில இடங்களில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுபற்றி அவர்கள் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (ஏப்.,2) சென்னையில் 5 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள காந்திநகர் பகுதியில் தனியார் பஸ் உரிமையாளரான சந்திரசேகர் என்பவர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று( ஏப்.,03) சோதனை மேற்கொண்டனர். இவர் பிரபல அரசியல் கட்சிக்கு நெருக்கமானவர் எனக்கூறப்படும் நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. இச்சோதனையில் அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.4 கோடி வரை பணம் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கைபற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

சென்னையில்

ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவரின் வீடு, புரசைவாக்கம் கொண்டித்தோப்பு, கொரட்டூர் பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களின் வீடுகள் என 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.இதில் தொழில் அதிபர்களின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கொரட்டூரில் மட்டும் ரூ.2.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் என்பது தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
ஏப் 04, 2024 12:49

பாஜகவினர் பணமாக வாங்க மாட்டார்கள் தேர்தல் பத்திரங்களாகட்டுமே வாங்குவார்கள்!


Sivaprakash
ஏப் 03, 2024 19:40

இன்னும் தேடிப் பாருங்கள்


Anbuselvan
ஏப் 03, 2024 19:29

அது சரி எந்த கட்சி உடையதுன்னு கண்டு புடிச்சுட்டாங்களா?


GMM
ஏப் 03, 2024 18:58

ஒடு பூட்டுக்கு விசாரணை அமைப்புகள் நீதிமன்றம் சாவியை தனித்தனியாக வைத்து இருக்கும் போது , ரெய்டு ஒரு கெய்டு ஆக மாறிவிடும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மாறும் குற்றவாளிக்கு வாதிடும் வழக்கறிஞர் தண்டிக்காத வரை லஞ்ச ஒழிப்பு முயற்சி விரயம் ஆகும்


Godfather_Senior
ஏப் 03, 2024 18:44

செந்தில் பாலாஜி உள்ளே இருந்தா என்ன , எப்படி பணம் பறிப்பது மேலும் எப்படி வாக்காளர்களுக்கு அதை பட்டுவாடா செய்வது என்பதெல்லாம் தில்லு முல்லு திமுகவுக்கு எப்போதுமே சுலபமான வேலை இதெல்லாம் ஒரு சின்ன கொசுறு மடக்கல் தான், ஏன்னா இன்னும் ஆயிரமாயிரம் கோடிகள் மாட்டாமல் பத்திரமாக உள்ளது


sri
ஏப் 03, 2024 23:09

அய்யோ


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை