மேலும் செய்திகள்
மரவள்ளி கிழங்கில் சூப்பரான வடை
16-Aug-2025
ப.வேலுார்: ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரிய கரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனுார், கூடச்சேரி, கபிலர்மலை, சின்ன மருதுார், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர். ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.கடந்த வாரம், மரவள்ளி கிழங்கு டன் ஒன்று, 4,000 ரூபாய்க்கு விற்றது. தற்போது டன் ஒன்றுக்கு, 2,000 ரூபாய் வரை உயர்ந்து, 6,000 ரூபாய்க்கு விற்கிறது. கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று, 7,000 ரூபாய்க்கு விற்றது. தற்போது டன் ஒன்றுக்கு, 3,000 ரூபாய் வரை உயர்ந்து, 10,000 ரூபாய்க்கு விற்கிறது. மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வால் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
16-Aug-2025