தெற்கு அரசு ஆண்கள் பள்ளிக்கு சிசிடிவி
நாமக்கல்;நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை கண்காணிக்கும் வகையில், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, எம்.பி., மாதேஸ்வரன், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், ஏழு 'சிசிடிவி' கேமரா வழங்கினார். அவற்றை பள்ளி வளாகத்தில் முக்கிய இடங்கில் பொருத்தப்பட்டன. இதையடுத்து, 'சிசிடிவி' கேமரா தொடக்க விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசராகவன் தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன் கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். முதுகலை ஆசிரியர்கள் ஜெகதீசன், உமா மாதேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.